Enter your Email Address to subscribe to our newsletters

கவுகாத்தி, 12 மே (ஹி.ச.)
126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டமன்றத்தில் 102 இடங்களைப் பெற்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சி 82 இடங்களுடன் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக உருவெடுத்தது, அதே நேரத்தில் அதன் கூட்டணிக் கட்சிகளான அசோம் கண பரிஷத் (AGP) மற்றும் போடோலாந்து மக்கள் முன்னணி (BPF) தலா 10 இடங்களை வென்றன.
பாஜக, அசாம் கண பரிஷத் (AGP), மற்றும் போடோலாந்து மக்கள் முன்னணி (BPF) ஆகிய கூட்டணிக் கட்சிகளின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், பாஜக மற்றும் தே.ஜ.கூட்டணி சட்டமன்றக் கட்சிகளின் தலைவராக ஹிமந்த பிஸ்வா சர்மா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்படி ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று அசாம் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்பு விழா கானாபாராவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இன்று காலை 11:40 மணிக்கு தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மூத்த மத்திய அமைச்சர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
பதவியேற்புக்கு முன்னதாக, அசாம் முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஹிமந்த பிஸ்வா சர்மா, மா காமாக்யா கோயிலில் வழிபட்டு ஆசி பெற்றார்.
பஞ்சாப் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான அசாம் அரசின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று கவுகாத்தி வந்தடைந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கட்டாரியா,
நான் சில காலம் அசாம் மாநில ஆளுநராகப் பணியாற்றியதால், அம்மாநில மக்களுடன் எனக்கு தனிப்பட்ட பிணைப்பு உள்ளது. ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான அசாம் அரசின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவே நான் இங்கு வந்துள்ளேன்.
என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b