முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகள் மீது மீண்டும் விசாரணை – மேற்கு வங்க அமைச்சர் திலீப் கோஷ் அறிவிப்பு
கொல்கத்தா, 12 மே (ஹி.ச.) மேற்கு வங்கத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிலுவையில் இருந்த ஊழல் புகார்களை விசாரிக்கும் நடவடிக்கைகள் தீவி
முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகள் மீது  மீண்டும் விசாரணை – மேற்கு வங்க அமைச்சர் திலீப் கோஷ் அறிவிப்பு


கொல்கத்தா, 12 மே (ஹி.ச.)

மேற்கு வங்கத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிலுவையில் இருந்த ஊழல் புகார்களை விசாரிக்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

மேற்கு வங்கத்தின் முன்னாள் அரசாங்கத்தைச் சேர்ந்த ஊழல் தலைவர்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளும் மீண்டும் திறக்கப்பட்டு முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று அம்மாநில அமைச்சர் திலீப் கோஷ் அறிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் கூறியதாவது,

திரிணாமுல் காங்கிரஸின் பெரும்பாலான தலைவர்கள் ஊழல்வாதிகள். இதுவரை காவல்துறை மற்றும் அரசு அனுமதி அளிக்காததால் விசாரணைகள் நடக்கவில்லை. ஆனால் இனி அனைத்து வழக்குகளும் மறுதொடக்கம் செய்யப்படும். ஒவ்வொன்றின் மீதும் விசாரணை நடத்தப்படும். மக்கள் விரும்புவது நடக்கும்

என்று திலீப் கோஷ் கூறினார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசு வெற்றி பெற்ற பிறகு, மேற்கு வங்கத்தில் புதிதாக அமைந்துள்ள அரசு எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

நிர்வாகத்தை மீட்டெடுப்பதும், பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

இதுவரை அரசியல் தலையீடு காரணமாக முடக்கப்பட்டிருந்த பல வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் திலீப் கோஷின் இந்த அறிவிப்பு உணர்த்துகிறது.

இந்த நடவடிக்கை மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b