Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மே (ஹி.ச)
மத்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தன்னாட்சி அமைப்புகளை மத்திய அரசு தனது அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதாகவும், சிபிஐ இயக்குநர் பதவி நீட்டிப்பு அதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
இதனுடன், மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், மாநில அரசுகளே மாணவர் சேர்க்கைக்கான தேர்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
நீட் தேர்வு சமூகநீதிக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரானது என்றும், கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை பறிப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் திரளாகக் கூடி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும், முக்கிய இடங்களிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில், மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் சிபிஐ இயக்குநரின் பதவிக் காலத்தை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும், ஜனநாயக அமைப்புகளின் தன்னாட்சியை நிலைநாட்டவும் தொடர்ந்து போராடுவோம் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசு தனது முடிவுகளை மறுபரிசீலனை செய்யாவிட்டால், அடுத்த கட்டமாக மாநிலம் தழுவிய பெரும் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b