தேசிய அழிந்து வரும் உயிரினங்கள் தினம்.!
தமிழ்நாடு, 15 மே (ஹி.ச.) ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. 2026 ஆம் ஆண்டில், இந்த தினம் மே 15, 2026 அன்று அனுசரிக்கப்படுகிறது. அழிந்து வரும் விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித
க


தமிழ்நாடு, 15 மே (ஹி.ச.)

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

2026 ஆம் ஆண்டில், இந்த தினம் மே 15, 2026 அன்று அனுசரிக்கப்படுகிறது.

அழிந்து வரும் விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

2006ஆம் ஆண்டு டேவிட் ராபின்சன் மற்றும் அழிந்து வரும் உயிரினங்களின் கூட்டமைப்பு (Endangered Species Coalition) ஆகியோரால் நிறுவப்பட்டது.

நோக்கம்:

உலகெங்கிலும் உள்ள அழிந்து வரும் உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

முக்கியத்துவம்:

இந்தியாவில் காணப்படும் வங்காளப் புலி, பனிச்சிறுத்தை, சிவப்பு பாண்டா போன்ற பல உயிரினங்கள் பாதுகாப்பின் அவசியத்தை இந்த நாள் வலியுறுத்துகிறது.

அழிந்து வரும் உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

இந்த உயிரினங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க மக்களை ஊக்குவித்தல்.

உயிரியல் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல்.

மேலும், சுற்றுச்சூழல் அமைப்புகளில் உயிரினங்களின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது.

Hindusthan Samachar / Durai.J