Enter your Email Address to subscribe to our newsletters

இட்டாநகர் , 16 மே (ஹி.ச.)
அருணாச்சலப் பிரதேசத்தின் லோகிட் மாவட்டத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இன்று அதிகாலை 2.35 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் சுமார் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், 27.801 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 96.543 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் மையம் கொண்டதாகவும் முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA