Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத், 16 மே (ஹி.ச.)
தெலங்கானா மாநில உருவாக்க தினமான ஜூன் 2க்குள், போராட்ட வீரர்கள் மற்றும் அமரர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று தெலங்கானா ரக்ஷண சேனா தலைவர் கவிதா காங்கிரஸ் அரசை வலியுறுத்தினார்
இது தொடர்பாக,அவர் வெளியிட்ட அறிக்கையில்:
போராட்ட வீரர்களின் நலனில் அரசு அலட்சியம் காட்டி வருவதாக குற்றம்சாட்டிய அவர், ஜூன் 2 அன்று நடைபெறும் மாநில உருவாக்க தின விழாவை முன்னிட்டு, போராட்ட வீரர்களுக்கு 250 சதுர கஜ வீட்டு நிலம் வழங்கவும், அமரர் குடும்பங்களுக்கு சுதந்திரப் போராட்ட வீரர் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தொடங்கவும் கோரிக்கை விடுத்தார்.
போராட்ட வீரர்களை அடையாளம் காண அரசு அமைத்துள்ள சிறப்பு குழுவில் ஒரே ஒரு பெண்ணுக்குக் கூட இடமளிக்காததை கவிதா கடுமையாக கண்டித்தார்.
தெலங்கானா போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய பெண்களை புறக்கணிப்பது மொத்த பெண்களையும் அவமதிப்பதாகும் என அவர் தெரிவித்தார்.
மேலும், குழுக்கள் அமைப்பதிலேயே காலம் தாழ்த்துவது காங்கிரஸ் அரசின் வழக்கமாகிவிட்டதாகவும், ஜூன் 2க்குள் இந்த செயல்முறையை தொடங்கவில்லை என்றால் போராட்ட வீரர் அமைப்புகளுடன் இணைந்து போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் எச்சரித்தார்.
இதற்கிடையில், தெலங்கானா போராட்ட வீரர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் வகையில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு ஜி.ஓ. எண் 679 மூலம் சிறப்பு குழுவை அமைத்துள்ளது.
இந்த குழுவுக்கு கே. கேசவராவ் தலைவர் ஆகவும், அமைச்சர் பொன்னம் பிரபாகர், எம்.எல்.சி பிரொஃ. கோதண்டராம் உள்ளிட்டோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA