திருமலையில் பக்தர்கள் சர்வதரிசனத்திற்கு 18 மணி நேரம் காத்திருப்பு...!
திருப்பதி , 17 மே (ஹி.ச..) ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் பகுதியில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. “ஸ்ரீனிவாச கோவிந்தா… ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா…” என பக்தர்கள் கோஷமிட்டபடி திருமலைக்கு திரளாக வருகை தருக
அ


திருப்பதி , 17 மே (ஹி.ச..)

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் பகுதியில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

“ஸ்ரீனிவாச கோவிந்தா… ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா…” என பக்தர்கள் கோஷமிட்டபடி திருமலைக்கு திரளாக வருகை தருகின்றனர்.

பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களால், 31 காம்பார்ட்மெண்ட்கள் நிரம்பி, சிலாதோரணம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

டோக்கன் பெறாத பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 18 மணி நேரம் வரை ஆகும் என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று மட்டும் 90,011 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இதில் 39,083 பக்தர்கள் தலையை முடித்து காணிக்கை செலுத்தியுள்ளனர்.

மேலும், பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் மூலம் ஹுண்டியில் ரூ. 3.76 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA