Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 17 மே (ஹி.ச)
தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சகங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதை வரவேற்பதாகவும், ஆனால் திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவுச் சட்டத் துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
பல நிதி நெருக்கடிகளும் சீர்திருத்தத் தேவைகளும் உள்ள திரைப்படத் துறையின் பிரச்சினைகளை, கடந்த 30 ஆண்டுகளாக அந்தத் துறையின் ஒரு பகுதியாக இருந்து வரும் ஜோசப் விஜய் போன்ற ஒருவரே முழுமையாக புரிந்துகொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திரைப்படத் துறைக்காக முதலமைச்சர் கவனிக்க வேண்டிய முக்கிய கோரிக்கைகளையும் விஷால் முன்வைத்துள்ளார்.
அதில்,
அரசு சார்பிலான டிக்கெட் வழங்கும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன், ரசிகர்களுக்கும் டிக்கெட் கட்டணத்தில் நிவாரணம் கிடைக்கும்.
“ஒரே இந்தியா, ஒரே வரி” கொள்கைக்கு முரணாக உள்ளாட்சி கேளிக்கை வரி விதிக்கப்படுவதாகக் கூறி, அந்த வரியை ரத்து செய்ய வேண்டும்.
சிறிய திரைப்படங்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகையை அதிகரிக்க வேண்டும்.
என்ற கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கோரிக்கைகள் கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருவதாகவும், அமைச்சர் ராஜ்மோகனை விமர்சிப்பதற்காக அல்லாமல், திரைப்படத் துறைக்கு தேவையான நிவாரணத்தை முதலமைச்சர் நேரடியாக வழங்க வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட கருத்து என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ