Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 மே (ஹி.ச)
சென்னையில் அயனாவரம் மற்றும் திருமங்கலத்தில் அமலாகத்துறை அதிகாரிகள் குழுவினர் இன்று (மே 19) காலையிலேயே அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பழைய கார்களை வாங்கி விற்கும் பைனான்சியர் வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்தல், சட்டவிரோத பண பரிவர்த்தை உள்ளிட்ட புகார்கள் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b