முதல்வர் விஜய்க்காக வேளாங்கண்ணியில் முட்டிபோட்டு வேண்டுதல் நிறைவேற்றிய நடிகர் ஜெரால்டு மில்டன்
நாகை, 19 மே (ஹி.ச.) தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக முதலைமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில் திருச்சி கிழக்க
ஜெரால்ட் மில்டன்


நாகை, 19 மே (ஹி.ச.)

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக முதலைமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.

இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட விஜய் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என தவெக நிர்வாகியும் நடிகருமான திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த ஜெரால்டு மில்டன் வேளாங்கண்ணி மாதா கோவிலில் வேண்டி கொண்டுள்ளார்.

இவர் திருச்சி கிழக்கு தொகுதியில் தேர்தல் பொறுப்பாளராகவும் இருந்து விஜய் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக பிரச்சாரம் செய்துள்ளார். இந்த நிலையில் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி அடைந்து முதல்வராக ஆன நிலையில் தனது வேண்டுதலை நிறைவேற்ற தனது ஆதரவாளர்களுடன் வேளாங்கண்ணிக்கு இன்று வருகை தந்தார்.

உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்ய மாதா பேராலயத்தில் முட்டி போட்டு நடந்து சென்று தனது வேண்டுதலை நிறைவேற்றினார்.

தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி மனமுருகி பிரார்த்தனை செய்தார். மேலும் திருச்சி கிழக்கு தொகுதியில் நடைப்பெற உள்ள இடைத் தேர்தலிலும் தவெக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என வேண்டுதலை வைத்தும் பிரார்த்தனை செய்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam