Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 19 மே (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டகுளம் பகுதியில், எட்டு வயதுடைய மாற்றுத்திறனாளி சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் 13 வயது சிறுவனை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொட்டகுளம் பகுதியில் வசித்து வரும் 13 வயது சிறுவன், அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. அதே பகுதியைச் சேர்ந்த, 100 சதவீத மாற்றுத்திறனாளியான எட்டு வயது சிறுமியிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவத்தை அறிந்த சிறுமியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையம்ல் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, குற்றச்சாட்டுக்குள்ளான சிறுவனை காவல்துறையினர் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். சிறுமியிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பவத்தின் உண்மை நிலை குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN