தூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி - மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு
தூத்துக்குடி , 02 மே (ஹி.ச.) தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய வளாகத்தில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளியைத் தொடங்க மத்திய கல்வி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்த உத்தரவை கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS) பிறப்பித்துள
Kendriya Vidyalaya School in Thoothukudi


தூத்துக்குடி , 02 மே (ஹி.ச.)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய வளாகத்தில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளியைத் தொடங்க மத்திய கல்வி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்த உத்தரவை கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS) பிறப்பித்துள்ளது.

இந்தப் புதிய பள்ளியில் 2026-27 கல்வியாண்டிலிருந்து முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

தூத்துக்குடி, பாரதி நகர், ஹார்பர் எஸ்டேட் பகுதியில் உள்ள ஹார்பர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் இந்தப் பள்ளி செயல்படும்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முழுப் பொறுப்பையும் வ.உ.சி. துறைமுக ஆணையமே ஏற்கும். மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை, கேந்திரிய வித்யாலயா சங்கதனின் 'புராஜெக்ட் செக்டார்' விதிகளின்படி முன்னுரிமை அளிக்கப்படும்.

நிலம் மற்றும் தற்காலிகக் கட்டிட ஏற்பாடுகள் நிறைவடைந்த 30 நாட்களுக்குள் மாணவர் சேர்க்கை செயல்முறையை முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b