Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 21 மே (ஹி.ச.)
மேற்கு வங்காளத்தின் ஃபால்டா சட்டமன்றத் தொகுதிக்கான மறு வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை 9 மணி நிலவரப்படி தோராயமாக 15 முதல் 18 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 11 மணி அளவில் சுமார் 31.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல், பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
முந்தைய தேர்தலின்போது வன்முறை மற்றும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த முறை 285 வாக்குச்சாவடிகளிலும் பலத்த மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்புடன் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேலும், கடந்த முறை வெப் கேமராக்கள் மறைக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் ஆணையத்தின் நேரடி வெப்கேமரா கண்காணிப்பு தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் இறுதி நேரத்தில் போட்டியிலிருந்து விலகியதை அடுத்து, சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக வேட்பாளர் தேபாங்சு பாண்டா மற்றும் இடதுசாரி வேட்பாளர் சாம்பு குர்மி ஆகியோருக்கு இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.
இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இறுதி வாக்குப்பதிவு சதவீதம் 80 சதவீதத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P