Enter your Email Address to subscribe to our newsletters

கடப்பா, 22 மே (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச அரசியலில் குற்றச்சாட்டு–எதிர்க்குற்றச்சாட்டு வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது.
நாரா லோகேஷ் மற்றும் ஒய்.எஸ். ஜகன்மோகன் ரெட்டி இடையே கடும் விமர்சனங்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.
கடப்பாவில் நடைபெற்ற டி.டி.பி. கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பேசிய அமைச்சர் நாரா லோகேஷ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
வைசிபிக்கு ‘கோடாரி கட்சி’ என்று பெயர் வைத்ததற்காக ஜெகன் வருத்தமடைந்தார். ஆனால் ‘ரப்பாரப்பா’ என்று கன் கலாச்சாரத்தை ஆதரித்தது உங்கள் குடும்பத்தாரே அல்லவா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், “ஜெகன் அரசியலை ஒரு சினிமாவைப் போல நடத்துகிறார். அந்த சினிமாவுக்கு ‘எண்ட் கார்டு’ போடுவது மஞ்சள் படையினரின் பொறுப்பு” என்று லோகேஷ் கூறினார்.
கடப்பாவில் நடந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பெரிய தஸ்தகிரி கொலை சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டார். அந்தக் கொலைக்கு ஜெகன் குடும்பத்தினர் காரணம் என குற்றம்சாட்டிய அவர், இதை மறைத்து தங்கள்மீது வழக்குகள் பதிவு செய்வதாக மிரட்டுவது நகைச்சுவையாக இருப்பதாக தெரிவித்தார்.
“மக்கள் முன் அன்பாக நடந்து கொண்டு, உள்ளே சென்றதும் கோடாரி தாக்குதல் நடத்துவது ஜெகனின் இயல்பு. இப்படிப்பட்ட நடிப்புக்கு ஆஸ்கர் விருது வேண்டாம்; ‘பாஸ்கர் விருது’ வழங்கலாம்” என்று லோகேஷ் நையாண்டி செய்தார்.
மேலும், டி.டி.பி.–ஜனசேனா–பாஜக கூட்டணி கட்சிகளுக்குள் பிளவை ஏற்படுத்த வைசிபி சதி செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஜெகனின் குற்ற மனப்பான்மை குறித்து மக்கள் அனைவருக்கும் தெளிவாக தெரிந்துவிட்டதாகவும் கூறினார்.
2019 தேர்தலுக்கு முன் விவேகானந்த ரெட்டி மரணம் தொடர்பாக முதலில் இதய நோயால் இறந்ததாக கூறப்பட்டு, பின்னர் கோடாரி தாக்குதல் நடந்தது வெளிவந்ததை நினைவுபடுத்திய லோகேஷ், அந்த சம்பவத்தையும் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.
இதன் மூலம் ஆந்திரப் பிரதேசத்தில் அரசியல் சூழ்நிலை மேலும் பதற்றமடைந்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA