பி.ஆர்.எஸ் ஆட்சிக்கு வந்தால் ‘ஃப்யூச்சர் சிட்டி’ ரத்து – ஹரீஷ் ராவ் எச்சரிக்கை
ஹைதராபாத் , 22 மே (ஹி.ச.) தெலங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பி.ஆர்.எஸ் கட்சியின் முக்கிய தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஹரிஷ் ராவ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தனது அறிக்கையில், அமெரிக்கா பயணத்தில் உள்ள அவர், அங்கு நடைபெற்ற
T


ஹைதராபாத் , 22 மே (ஹி.ச.)

தெலங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பி.ஆர்.எஸ் கட்சியின் முக்கிய தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஹரிஷ் ராவ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

தனது அறிக்கையில்,

அமெரிக்கா பயணத்தில் உள்ள அவர், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, தெலங்கானாவில் காங்கிரஸ் அரசு முன்னெடுத்து வரும் ‘ஃப்யூச்சர் சிட்டி’ திட்டத்தை கடுமையாக விமர்சித்தார். பி.ஆர்.எஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த திட்டத்தை ரத்து செய்வோம் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், முந்தைய பி.ஆர்.எஸ் அரசு கொண்டு வந்த ‘பார்மா சிட்டி’ திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவோம் என்றும் கூறினார். இந்த திட்டத்திற்காக சுமார் 16 ஆயிரம் ஏக்கர் நிலம் கைப்பற்றப்பட்டதாகவும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதிகளும் கிடைத்துள்ளதாகவும் அவர் விளக்கினார்.

விவசாயிகளிடமிருந்து எதற்காக நிலம் பெற்றோமோ, அதே நோக்கத்திற்கே பயன்படுத்த வேண்டும் என்ற சட்டம் உள்ளதாகவும், வேறு பயன்பாட்டிற்கு மாற்றினால் அந்த நிலங்களை மீண்டும் விவசாயிகளுக்கே திருப்பி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

‘ஃப்யூச்சர் சிட்டி’ என்ற பெயரில் காங்கிரஸ் அரசு ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்கிறது என்று குற்றம் சாட்டிய ஹரீஷ் ராவ், ‘பார்மா சிட்டி’ திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் அரசு தவறான தகவல் அளித்துள்ளதாகவும் கூறினார்.

‘பார்மா சிட்டி’ திட்டம் மூலம் பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், அந்த திட்டத்தை தொடர வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA