Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 23 மே (ஹி.ச.)
இந்தியா மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்கிடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சைப்ரஸ் நாட்டின் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடோலிடிஸ் இந்தியா வருகை தந்து, பிரதமர் நரேந்திர மோடி உடன் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
புத்தாக்கம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் கலாசாரம் போன்ற துறைகளில் இருநாடுகளும் ஆழமான ஒத்துழைப்பை உருவாக்க இந்த ஒப்பந்தங்கள் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஒரு கூட்டுப் பணிக்குழுவை அமைக்கும் ஒப்பந்தமும் இதில் அடங்கியுள்ளது.
இதற்கிடையில், இடம்பெயர்வு மற்றும் மக்கள் இயக்கம் தொடர்பான விரிவான கூட்டாண்மையை விரைவில் இறுதிப்படுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டன.
அத்துடன், 5 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்ட வரைவை இரு நாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ளன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA