முதல்வர் விஜய் தலைமையில் சென்னையில் மே 27 ஆம் தேதி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்கம்
சென்னை, 23 மே (ஹி.ச.) தமிழக முதல்வராக பதவி ஏற்றதும், முதல்வர் விஜய் பெண்கள் பாதுகாப்புக்கு என தமிழகத்தில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ தொடங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி வேகமாக இத்திட்டப்பணிகள் நடைபெற்றன. இப்படையில் ஒரு போலீஸ் சூ
முதல்வர் விஜய் தலைமையில்  மே 27 ஆம் தேதி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா


சென்னை, 23 மே (ஹி.ச.)

தமிழக முதல்வராக பதவி ஏற்றதும், முதல்வர் விஜய் பெண்கள் பாதுகாப்புக்கு என தமிழகத்தில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி வேகமாக இத்திட்டப்பணிகள் நடைபெற்றன. இப்படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட

30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த அதிரடி படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

வரும் மே 27 ஆம் தேதி மாலை 5 மணிக்கு, சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த அதிரடிப்படையின் ரோந்து பணிக்காக 30 ரோந்து வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் கலந்துகொளும் முதல்வர் விஜய் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைக்கிறார்.டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர், போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

குற்றச்சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து கண்காணித்தல், பொது இடங்களில் தொடர்ந்து ரோந்து மேற்கொண்டு, பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குதல், பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள்.

கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்வது.

சட்டவிரோத மற்றும் பெண்களுக்கு எதிரான செயல்களை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுப்பது, பெறப்படும் புகார்களுக்கு உடனடி மற்றும் உரிய நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்டவை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் (SSF) செயல்பாடுகளாக வகுக்கப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / vidya.b