யாதமரி ‘சஞ்சீவனி’ பி.எச்.சி.யில் ஏஐ உதவியுடன் மருத்துவ சேவை - முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு
சித்தூர் , 24 மே (ஹி.ச.) கிராமப்புற மக்களுக்கு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தரமான மருத்துவ சேவைகளை வழங்கும் முறையை ஆய்வு செய்ய ஆந்திரப் பிரதேச முதல்வர் சசந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டார். அப்போது யாதமரி பகுதியில் உள்ள ‘
A


சித்தூர் , 24 மே (ஹி.ச.)

கிராமப்புற மக்களுக்கு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தரமான மருத்துவ சேவைகளை வழங்கும் முறையை ஆய்வு செய்ய ஆந்திரப் பிரதேச முதல்வர் சசந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டார்.

அப்போது யாதமரி பகுதியில் உள்ள ‘சஞ்சீவனி’ ஆரம்ப சுகாதார மையத்தை (பி.எச்.சி.) அவர் பார்வையிட்டு, அங்கு வழங்கப்படும் டிஜிட்டல் மருத்துவ சேவைகளின் செயல்பாட்டை நேரில் ஆய்வு செய்தார்.

முழு செயல்முறை ஆய்வு

மருத்துவ மையத்திற்கு நோயாளி வருகை தரும் தருணத்திலிருந்து மருந்து பெற்று செல்லும் வரை நடைபெறும் முழு செயல்முறையையும் முதல்வர் கவனித்தார்.

நோயாளி பதிவு, டிஜிட்டல் க்யூ மேலாண்மை, விஜிட் பதிவுகள் போன்ற சேவைகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

ஏஐ மருத்துவ ஆலோசனை

பின்னர், நர்ஸ் நிலையத்தில் நோயாளிகளின் ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை, இதய துடிப்பு உள்ளிட்ட தகவல்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படுவது குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஏஐ அடிப்படையிலான மருத்துவ ஆலோசனை முறையையும் முதல்வர் நேரில் பார்த்தார்.

நோயாளியின் பழைய மருத்துவ வரலாறு மற்றும் பரிசோதனை தகவல்களின் அடிப்படையில் ஏஐ உதவியுடன் நோயறிதல் செய்யப்படும் முறை குறித்து மருத்துவர்கள் விளக்கினர்.

ஆவணப் பணி குறைவு

இந்த தொழில்நுட்பம் மூலம் மருத்துவர்களின் ஆவணப் பணிச்சுமை குறைந்து, நோயாளிகளுக்கு அதிக நேரம் ஒதுக்க முடிகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தானியங்கி ஆவண பதிவு மற்றும் டிஜிட்டல் மருந்து பரிந்துரை முறைகளும் செயல்பாட்டில் உள்ளன.

மருந்து வழங்கல் & காணொலி ஆலோசனை

பின்னர் மருந்தகம் பிரிவில் டிஜிட்டல் பரிந்துரையின் அடிப்படையில் விரைவாக மருந்துகள் வழங்கப்படும் முறையையும் முதல்வர் பார்வையிட்டார்.

இறுதியாக ‘சஞ்சீவனி’ தளத்தின் மூலம் குப்பம் மற்றும் பெங்களூருவில் உள்ள நிபுணர் மருத்துவர்களுடன் காணொலி ஆலோசனை நடத்தினார்.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற மருத்துவ சேவைகளுக்கிடையிலான வித்தியாசத்தை குறைப்பதில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று முதல்வர் தெரிவித்தார்.

மருத்துவ மைய பணியாளர்களின் பணியை அவர் பாராட்டினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA