எரிபொருள் விலை உயர்வு தவிர்க்க முடியாதது - பாரத் பெட்ரோலியம் தகவல்
புதுடெல்லி, 24 மே (ஹி.ச.) சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மேலும் உயர்த்துவது “தவிர்க்க முடியாதது” என பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு ஆச
பாரத்


புதுடெல்லி, 24 மே (ஹி.ச.)

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மேலும் உயர்த்துவது

“தவிர்க்க முடியாதது” என பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு ஆசியப் பகுதியில் நீடிக்கும் போர் பதற்றம், சர்வதேச வர்த்தகப் பாதைகளில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் உள்ளிட்ட காரணங்களால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ஆனால், அந்த உயர்வுக்கு இணையாக உள்நாட்டில் எரிபொருள் விலை மாற்றப்படாததால் எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள்தோறும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிதிச் சுமையை சமாளித்து, தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில் அடுத்தகட்ட விலை உயர்வு விரைவில் அமலுக்கு வரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கடந்த சில வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்ட நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், பாரத் பெட்ரோலியம் வெளியிட்டுள்ள இந்த தகவலைத் தொடர்ந்து, இந்தியன் ஆயில் மற்றும் ஹெச்.பி.சி.எல் நிறுவனங்களும் விரைவில் எரிபொருள் விலை உயர்வை அறிவிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P