Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 25 மே (ஹி.ச.)
சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில் காட்டாங்குளத்தூர் யார்டில் பொறியியல் பணி நடைபெறுவதால், கடற்கரை - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி,
சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு இன்று (25-ம் தேதி) காலை 10.56, பகல் 11.40, நண்பகல் 12.28 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், கூடுவாஞ்சேரி -செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு நண்பகல் 12.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு இன்று நண்பகல் 12, மதியம் 1.10, 1.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில், செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு மதியம் 2.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், செங்கல்பட்டு - தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b