Enter your Email Address to subscribe to our newsletters

கோதாவரி , 26 மே (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், கோதாவரி புஷ்கர விழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் ஏற்பாடுகளை ஆய்வு செய்தபோது, நதியில் அதிகரித்து வரும் மாசுபாடு குறித்து கடும் கவலை வெளியிட்டார்.
ராஜமன்றியில் நேரில் ஆய்வு மேற்கொண்ட அவர், வெங்கடநகரம் அருகே உள்ள ஆந்திரா பேப்பர் மில்ஸ் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் கோதாவரி நதியில் கலக்கும் இடத்துக்கு படகில் சென்று பார்வையிட்டார்.
அங்கு அதிகாரிகளிடம் நீர் மாதிரிகளை சேகரிக்கவும் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில் அமைச்சர்கள் நாதெண்டலா மனோகர்
மற்றும் கந்துலா துர்கேஷ்
கலந்து கொண்டனர்.
பின்னர் பவன் கல்யாண் கூறியதாவது:
புனிதமான கோதாவரியில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பது மிகவும் துயரமானது. புஷ்கர காலத்தில் இந்த நீரில் குளித்தால் புண்ணியம் கிடைக்குமா தெரியாது… ஆனால் நோய்கள் வருவது மட்டும் உறுதி என்றார்.
மேலும், ஏலூரில் ஏற்பட்ட குடிநீர் மாசுபாடு சம்பவங்களை குறிப்பிட்ட அவர், மாநில வளர்ச்சிக்கு தொழில்கள் அவசியம் என்றாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அதே அளவில் முக்கியம் என்று வலியுறுத்தினார்.
இந்த மாசுபாடு பிரச்சினையை விரைவில் சட்டமன்றம் மற்றும் அமைச்சரவை கூட்டங்களில் எடுத்துரைப்போம் என்றும் தெரிவித்தார்.
புஷ்கரக் கடைகளை அழகுபடுத்துவதோடு மட்டும் இல்லாமல், நதியை மாசுபடாமல் பாதுகாக்கும் பொறுப்பும் அரசுக்கு இருப்பதாக அமைச்சர் கந்துலா துர்கேஷை நோக்கி கூறினார்.
தொழிற்சாலை மாசுபாட்டை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் பவன் கல்யாண் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA