ஜம்மு-காஷ்மீரில் 4 வது நாளாக தொடரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை
ரஜௌரி, 26 மே (ஹி.ச.) ஜம்மு-காஷ்மீர் ரஜௌரி மாவட்டம் மஞ்சகோட் பகுதியில் உள்ள கம்பீர் முக்லான் மற்றும் டோரிமல் காடுகளில் பாதுகாப்புப் படையினரின் பெரிய அளவிலான தேடுதல் வேட்டை இன்று 4வைத்து நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் பயங்கரவ
ஜம்மு-காஷ்மீரில் 4வது நாளாக தொடரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை


ரஜௌரி, 26 மே (ஹி.ச.)

ஜம்மு-காஷ்மீர் ரஜௌரி மாவட்டம் மஞ்சகோட் பகுதியில் உள்ள கம்பீர் முக்லான் மற்றும் டோரிமல் காடுகளில் பாதுகாப்புப் படையினரின் பெரிய அளவிலான தேடுதல் வேட்டை இன்று 4வைத்து நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த உளவுத்துறை தகவல்களை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பீர் பாஞ்சால் மலைத்தொடரில் உள்ள கடினமான நிலப்பரப்பில் இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உளவுத்துறை அடிப்படையிலான இந்த நடவடிக்கையின் போது,

சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் தொடர்பு கொண்டதைத் தொடர்ந்து, சிறிது நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

அதன் பிறகு, வனப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கம்பீர் முக்லான் பகுதியில் நடந்த கூட்டு நடவடிக்கையின் போது பயங்கரவாதிகளுடன் மோதல் ஏற்பட்டதை இந்திய ராணுவத்தின் வைட் நைட் கார்ப்ஸ் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.

சமீப நாட்களாக பாதுகாப்பு படையினரின் நிலைநிறுத்தம் கணிசமாக அதிகரித்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து உள்ளூர்வாசியான ஆகிப் கான் கூறுகையில்,

சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் குறித்த தகவல் கிடைத்ததையடுத்து, நேற்று முதல் கம்பீர் முக்லான் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் பலமாக குவிக்கப்பட்டுள்ளனர். முழுப் பகுதியும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

உள்ளூர் மக்கள் பாதுகாப்பு முகமைகளுடன் ஒத்துழைத்து வருகின்றனர்.

விரைவில் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் என நம்புகிறோம், என்றனர்.

Hindusthan Samachar / vidya.b