Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 26 மே (ஹி.ச.)
பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், “நோ பாஜக” திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று மாலை 4 மணிக்கு கட்சி தலைமையகத்தில் 12 நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட உள்ளார்.
பாஜக தேசியத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, வெளிநாட்டு தூதர்களுடன் அவர் மேற்கொள்ளும் முதல் சந்திப்பு இதுவாகும்.12 நாடுகளின் தூதரகத் தலைவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.
பாஜகவின் வெளியுறவுத் துறை பொறுப்பாளர் விஜய் சௌதாய்வாலேவும் உடனிருப்பார்.
பாஜகவின் வரலாற்றுப் பயணம், அடிப்படைக் கொள்கைகள், அமைப்பு கட்டமைப்பு, ஆட்சி மாதிரி மற்றும் தற்போதைய செயல்பாடுகள் குறித்து தூதரக சமூகத்தினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் “நோ பாஜக” திட்டம் பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கியுள்ளது.
இத்திட்டம், கட்சியின் 43-வது தொடக்க நாளான 2023-ல் முன்னாள் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b