தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் பரோலில் தற்காலிக விடுதலை
ரோஹ்தக், 26 மே (ஹி.ச) பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள சுனாரியா சிறையில் இருந்து 30 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். தண்ட
தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் பரோலில் தற்காலிக விடுதலை


ரோஹ்தக், 26 மே (ஹி.ச)

பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள சுனாரியா சிறையில் இருந்து 30 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தண்டனைக்குப் பிறகு அவர் தற்காலிகமாக விடுவிக்கப்படுவது இது 16வது முறையாகும்.

இன்று காலை சுமார் 6:34 மணியளவில் குறைந்த பாதுகாப்புடன் அவர் சிறையில் இருந்து வெளியேறினார்.

பரோல் குறித்து அவரது வழக்கறிஞர் ஜிதேந்திர குரானா கூறுகையில்,

இன்று அவருக்கு பரோல் கிடைத்துள்ளது. மாநிலத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியால் இது வழங்கப்பட்டுள்ளது. 30 நாட்களுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

பரோல் காலத்தில் சிர்சாவில் உள்ள தேரா சச்சா சவுதா ஆசிரமத்தில் அவர் தங்குவார்.

என்றும் அவர் கூறினார்.

குர்மீத் ராம் ரஹீம் சிங், 2017 ஆகஸ்ட் மாதம் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து சுனாரியா சிறையில் முதன்முதலாக அடைக்கப்பட்டார். அதன் பிறகு பலமுறை பரோல் அல்லது ஃபர்லோ வழங்கப்பட்டுள்ளது. 2026 ஜனவரியில் 40 நாள் பரோல் வழங்கப்பட்டு, பிப்ரவரி 15 அன்று அவர் மீண்டும் சிறைக்கு திரும்பினார்.

மார்ச் 7 அன்று, பத்திரிகையாளர் ராம்சந்திர சத்ரபதி கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங்கை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததாக அவரது வழக்கறிஞர் உறுதிப்படுத்தினார். தேரா தலைவரை தனது பத்திரிகையில் வெளிப்படையாக விமர்சித்த பத்திரிகையாளரின் கொலைக்கு சதி செய்ததாக சாமியார் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

2019இல், சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்து ஆயுள் தண்டனை விதித்தது. குல்தீப் சிங், நிர்மல் சிங், கிருஷ்ண லால் ஆகிய மூன்று குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, தலா ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

தலைமை நீதிபதி ஷீல் நாகு மற்றும் நீதிபதி விக்ரம் அகர்வால் ஆகியோர் அடங்கிய பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் இந்த விடுதலை தீர்ப்பை வழங்கியது.

2024இல், முன்னாள் தேரா அதிகாரி ரஞ்சித் சிங் 2002ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ராம் ரஹீம் மற்றும் நான்கு பேரை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

ஹரியானாவின் குருஷேத்ரா மாவட்டம் கான்பூர் கோலியான் கிராமத்தில் ஜூலை 10, 2002 அன்று நடந்த இந்தக் கொலைக்காக, பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் ராம் ரஹீம் உட்பட அனைத்து குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்திருந்தது.

சர்ச்சைக்குரிய இந்த சாமியாருக்கு தொடர்ந்து பரோல் வழங்கப்படுவது அரசியல் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b