Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 27 மே (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு முழுமையான திருத்தம் (எஸ்.ஐ.ஆர்-2026) பணிகள் வெளிப்படையாகவும், முறையாகவும் மேற்கொள்ளப்படும் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி விவேக் யாதவ் தெரிவித்துள்ளார்.
சச்சிவாலயத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பாரதீய ஜனதா, ஜனசேனா, சி.பி.எம்., ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில் எஸ்.ஐ.ஆர்-2026 திருத்த பணிகளின் நடைமுறை மற்றும் கால அட்டவணை குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
மாநிலத்தில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இந்த முழுமையான திருத்தம் நடைபெறுகிறது.
இறந்தவர்கள், போலியான பதிவுகள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்கி துல்லியமான வாக்காளர் பட்டியலை உருவாக்குவது இதன் நோக்கமாகும் என்று கூறப்பட்டது.
அதன்படி, ஜூன் 15 முதல் ஜூலை 14 வரை 46,397 பூத் நிலை அலுவலர்கள் வீடு தோறும் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள 4.16 கோடி வாக்காளர்களின் விவரங்கள் சரிபார்க்கப்படும்.
ஜூலை 21 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 20 வரை திருத்தங்கள் மற்றும் புதிய சேர்க்கைகளுக்கு பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும்.
அனைத்து செயல்முறைகளும் நிறைவடைந்த பின்னர், செப்டம்பர் 22 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இந்த திருத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு பூத்திற்கும் பூத் நிலை முகவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் சிஇஓ விவேக் யாதவ் கேட்டுக்கொண்டார்.
முறையான ஆய்வு இன்றி எந்த வாக்காளரின் பெயரும் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என்றும் அவர் உறுதி அளித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA