பக்ரீத் பண்டிகை - பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
புதுடெல்லி , 28 மே (ஹி.ச.) நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று இஸ்லாமியர்களால் பக்தி உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு நாட்டுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூகத்தில் சகோதரத்துவ உணர்வ
A


புதுடெல்லி , 28 மே (ஹி.ச.)

நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று இஸ்லாமியர்களால் பக்தி உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த பண்டிகையை முன்னிட்டு நாட்டுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் சகோதரத்துவ உணர்வு மேலும் வலுப்பெற இந்த பண்டிகை உதவ வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

பக்ரீத் நல்வாழ்த்துகள்! இந்த பண்டிகை நமது சமூகத்தில் சகோதரத்துவத்தையும் மகிழ்ச்சியையும் மேலும் அதிகரிக்கட்டும்.

அனைவருக்கும் வெற்றியும் நல்ல உடல்நலமும் கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA