Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 29 மே (ஹி.ச.)
தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) மகாநாடு-2026 இரண்டாம் நாள் கூட்டம் அரசியல் சூடுபிடித்த நிலையில் நடைபெற்றது.
இதில் மாநில உள்துறை அமைச்சர் வங்கலபூடி அனிதா, எதிர்க்கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
எதிர்க்கட்சி ஒரு ‘கொடாளி கட்சி’ ஆனால் டிடிபி அரசியலமைப்பை மதிக்கும் கட்சி” என்று அவர் கூறினார்.
கடந்த 5 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி முழுவதும் அழிவை ஏற்படுத்தியதாகவும், வேதிகை இடிப்பு மூலம் அந்த அழிவு தொடங்கியதாகவும் குற்றம் சாட்டினார்.
அமராவதி நகரத்திற்காக போராடிய பெண்கள் அவமதிக்கப்பட்டதாகவும், லோகேஷ் மேற்கொண்ட ‘யுவகளம்’ பாதயாத்திரைக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நாங்கள் வன்முறையை ஊக்குவிக்கும் கட்சி அல்ல. அரசியலமைப்புச் சட்டப்படி ஆட்சி நடத்துவோம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தான் மாநில வளர்ச்சி சாத்தியம் என கூறிய அனிதா, 2014-ல் தொடங்கப்பட்ட அமராவதி, போலவரம் திட்டங்களை நினைவுகூர்ந்தார்.
ஓய்வூதியம் ₹200 இலிருந்து ₹2000 ஆக உயர்த்தியதும் அவரது சாதனை என்று பாராட்டினார்.
அடுத்த 20 ஆண்டுகள் இதே அரசு தொடர்ந்தால், 2047-க்குள் ஆந்திரப் பிரதேசம் உலகில் முன்னணி மாநிலமாக மாறும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
மகாநாட்டை பெண்களுக்கு அர்ப்பணித்ததற்காக சந்திரபாபுவுக்கு நன்றி தெரிவித்தார்.
கடந்த ஆட்சி மீது சோமிரெட்டி குற்றச்சாட்டு
அடிப்படை வசதிகள் தொடர்பான தீர்மானத்தில் பேசிய எம்.எல்.ஏ. சோமிரெட்டி சந்திரமோகன் ரெட்டி, 2019–24 காலகட்டத்தில் வெறும் 1,800 கி.மீ. சாலைகள் மட்டுமே அமைக்கப்பட்டதாகவும், தற்போதைய அரசு 2 ஆண்டுகளில் 5,050 கி.மீ. சாலைகள் அமைத்துள்ளதாகவும் கூறினார்.
மாநிலத்தில் 50 சதவீத சாலைகள் சேதமடைந்தது கடந்த ஆட்சியின் அலட்சியத்தால் என குற்றம் சாட்டினார். அமராவதி விவசாயிகள் 1,631 நாட்கள் போராட்டம் நடத்தி, 230 பேர் உயிரிழந்ததாகவும் நினைவுகூர்ந்தார்.
பணபாகா லட்சுமி
கோயில்கள் பாதுகாப்பு தொடர்பான தீர்மானத்தில் பேசிய டிடிடி வாரிய உறுப்பினர் பணபாகா லட்சுமி, “கொடாளி கட்சி ஆட்சியில் கோயில்கள் சேதமடைந்தன என்று குற்றம் சாட்டினார்.
திருப்பதி லட்டு அவமதிக்கப்பட்டதாகவும், ஸ்ரீவாணி அறக்கட்டளை நிதிகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகவும் கூறினார். தற்போதைய அரசு அர்ச்சகர்களின் ஊதியம், வழிபாட்டு செலவுகளுக்கான நிதி ஆகியவற்றை உயர்த்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஸ்ரீவாணி நிதியின் மூலம் நாடு முழுவதும் 5,000 கோயில்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA