Enter your Email Address to subscribe to our newsletters

ஸ்ரீசைலம் , 29 மே (ஹி.ச.)
பிரபல சைவத் தலமான ஸ்ரீசைலத்தில் பக்தர்கள் அதிக அளவில் திரண்டுள்ளதால் ‘ஸ்பர்ஷ தரிசனம்’ (தொட்டு தரிசிக்கும் வசதி) தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஆலய நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாசராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் வரும் திங்கட்கிழமை வரை ஸ்பர்ஷ தரிசனம் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் பக்தர்களுக்கு சுவாமியின் அலங்கார தரிசனம் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ஏற்கனவே ஆன்லைன் மூலம் ஸ்பர்ஷ தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ள பக்தர்களுக்கு மட்டும் வழக்கம்போல் தரிசனம் அனுமதிக்கப்படும் என்று ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA