ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தனிப்பட்ட உதவியாளர் கே. நாகேஸ்வர ரெட்டி வீட்டில் சிட் சோதனை
விஜயவாடா , 29 மே (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மதுக்கும்பகோணம் வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தனிப்பட்ட உதவியாளர் (பி.ஏ.) கே. நாகேஸ்வர ரெட்டி (கே.என்.ஆர்) வ
A


விஜயவாடா , 29 மே (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மதுக்கும்பகோணம் வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தனிப்பட்ட உதவியாளர் (பி.ஏ.) கே. நாகேஸ்வர ரெட்டி (கே.என்.ஆர்) வீட்டில் சிறப்பு விசாரணைக் குழு (SIT) அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

மதுபான வர்த்தகத்தில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, விஜயவாடாவில் உள்ள அவரது இல்லத்தில் அதிகாரிகள் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.

அதே நேரத்தில், சிட் அலுவலகத்திலும் கே.என்.ஆர் மீது விசாரணை நடைபெற்றது.

நேற்று மதியம் 11 மணி முதல் தொடங்கிய விசாரணை நீண்ட நேரம் தொடர்ந்தது. அவரிடம் சுமார் 10 ½ மணி நேரம் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

விசாரணையின் போது கே.என்.ஆர் முரண்பட்ட பதில்கள் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகள் மேலும் ஆழமாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கே.என்.ஆரின் சொத்துக்கள் குறித்தும் முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அவரது மனைவி சசிகலா பெயரில் திருப்பதி மாவட்டத்தில் சுமார் 10 ஏக்கர் நிலம் இருப்பதுடன், 2019 முதல் 2024 வரை அவரது வங்கி கணக்கில் ரூ.19.86 கோடி வரவு வந்துள்ளதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

மேலும், விஜயவாடாவில் கார் ஷோரூமில் பங்கு, ஹைதராபாத், திருப்பதி, பெங்களூரு நகரங்களில் குடியிருப்புகள் மற்றும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கே.என்.ஆர், ஜெகன் முதல்வராக இருந்த காலத்தில் அதிக அளவில் சொத்துக்கள் சேர்த்தாரா என்ற கோணத்தில் சிட் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒருபுறம் விசாரணையும், மறுபுறம் வீட்டு சோதனையும் நடைபெறுவது இந்த வழக்கின் தீவிரத்தைக் காட்டுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA