சென்னையில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு - வாகன ஓட்டிகள் கவலை
சென்னை, 29 மே (ஹி.ச.) தமிழகத்தில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சென்னையில் இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய விலைப்பட்ட
பெட்ரோல்


சென்னை, 29 மே (ஹி.ச.)

தமிழகத்தில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சென்னையில் இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய விலைப்பட்டியலின்படி,

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று 24 காசுகள் உயர்ந்து ரூ.108.01 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றைய உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றம், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் போக்குவரத்து செலவுகள் போன்ற காரணங்களால் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.

தொடர்ச்சியான விலை உயர்வு நடுத்தர மக்கள், தினசரி இருசக்கர வாகன பயனாளர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து துறைக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், எரிபொருள் விலை உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இதற்கிடையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் வரிகளில் சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல்வேறு தரப்பினரிடமிருந்து மீண்டும் எழுந்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P