Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 03 மே (ஹி.ச.)
கிளுவை மரம் (Commiphora caudata) என்பது வேலிகளுக்காகவும் மருத்துவத்திற்காகவும் வளர்க்கப்படும் ஒரு சிறுமர வகையாகும்.
கிராமப்புறங்களில் வயல்வெளிகளைப் பாதுகாக்கும் உயிர்வேலியாக இது மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
இது ஒரு இலை உதிர் மரம்.
இதில் சிறு கிளுவை, பெருங்கிளுவை என இருவகைகள் உள்ளன.
இவை முறையே செங்கிளுவை, வெண் கிளுவை எனவும் குறிப்பிடப்படுவது உண்டு.
பொதுவான பண்புகள்: இது மென்மையான கட்டையையும், முக்கூட்டு இலைகளையும் கொண்ட ஒரு இலை உதிர் மரம்.
இதில் செங்கிளுவை (சிறு கிளுவை) மற்றும் வெண் கிளுவை (பெருங்கிளுவை) என இரு வகைகள் உள்ளன.
வேலி மரம்: கிளுவை மரத்தின் குச்சிகளை வெட்டி நட்டு வைத்தால் மிக எளிதாக வளர்ந்துவிடும்.
எனவே, கால்நடைகள் பயிர்களை மேயாமல் தடுக்க இது பெரும்பாலும் வேலியாகப் பயன்படுத்தப்படுகிறது.
மருத்துவ பயன்கள்:எலும்பு மூட்டுகளுக்கு இடையே உள்ள திரவத்தைச் (பசை) சுரக்கச் செய்யும் அபூர்வ குணம் இதற்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
உடல் உபாதைகள்: தொண்டைப் புண், வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளுக்கு கிளுவை ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
சுவாச ஆரோக்கியம்: இதன் காத்து உடலில் பட்டாலே ஆரோக்கியம் தரும் எனப் பாரம்பரியமாக நம்பப்படுகிறது.
அறிவியல் பெயர்: இதன் அறிவியல் பெயர் Commiphora caudata ஆகும்.
இது பர்சேராசியே (Burseraceae) குடும்பத்தைச் சார்ந்தது
Hindusthan Samachar / Durai.J