Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 03 மே (ஹி.ச.)
கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழகத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி,
ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 82.24 சதவீதமாக பதிவாகியுள்ளது. நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் வாக்காளர்களின் பங்கேற்பு அதிகமாக இருந்தது.
சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பிற பிராந்தியக் கட்சிகள் அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவியது.
வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் விருதுநகரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்,
அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) வெற்றி பெறும் எனக் கணித்துள்ள கருத்துக் கணிப்புகளை நிராகரித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய தாகூர் கூறியதாவது,
தேர்தல் கருத்துக் கணிப்புகள் வணிகமயமாக்கப்பட்டவை. “மக்களின் தீர்ப்பு” 24 மணி நேரத்தில் வெளியாகவுள்ள நிலையில், அதுவரை பொறுமை காக்க வேண்டும்.
தமிழகத்தில் அதிகரித்துள்ள வாக்குப்பதிவு, நாட்டின் ஜனநாயகத்திற்கு நல்ல அறிகுறி. இளைஞர்களும் பெண்களும் வாக்களித்த விதம், நாட்டின் ஜனநாயகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. இது தமிழ்நாட்டின் தொடர் முன்னேற்றத்திற்கு உதவும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பீப்பிள் பல்ஸ், மேட்ரைஸ், பி-மார்க் உள்ளிட்ட பல்வேறு கருத்துக் கணிப்பு நிறுவனங்கள், தமிழகத்தின் 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு (SPA) அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என்று கணித்துள்ளன.
அந்தக் கூட்டணி 120 முதல் 145 இடங்களைக் கைப்பற்றும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 60 முதல் 100 இடங்களைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b