திருமலை ஸ்ரீவாரி பக்தர்களுக்கு TTD அறிவிப்பு- ஸ்ரீவாணி டிக்கெட் வழங்கலில் முக்கிய மாற்றம்
திருப்பதி , 30 மே (ஹி.ச.) திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீவாணி டிரஸ்ட் தரிசன டிக்கெட் வழங்கும் முறையில் முக்கியமான மாற்றங்களை அறிவித்துள்ளது. பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள
A


திருப்பதி , 30 மே (ஹி.ச.)

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீவாணி டிரஸ்ட் தரிசன டிக்கெட் வழங்கும் முறையில் முக்கியமான மாற்றங்களை அறிவித்துள்ளது.

பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஸ்ரீவாணி டிரஸ்ட் தானதாரர்களுக்காக தினமும் 300 டிக்கெட்டுகள் தனியாக ஒதுக்கப்பட உள்ளன. 2025 மே 1ஆம் தேதிக்குப் பிறகு ரூ.10,000 நன்கொடை வழங்கிய தானதாரர்கள் மட்டுமே இந்த சிறப்பு கோட்டாவுக்கு தகுதி பெறுவார்கள்.

இந்த டிக்கெட்டுகள் தினமும் காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும், மதியம் 1 மணிக்குள் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு அதே நாளில் மாலை 4 மணிக்கு திருமலை ஸ்ரீவாரி தரிசனம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தினசரி 1,500 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. புதிய மாற்றங்களின்படி,

இதில் 500 டிக்கெட்டுகள் மூன்று மாதங்களுக்கு முன்பதிவிற்காகவும், 200 டிக்கெட்டுகள் திருப்பதி விமான நிலையத்தில் நேரடி (கேரண்ட்) புக்கிங்கிற்காகவும் ஒதுக்கப்படும்.

மீதமுள்ள 800 டிக்கெட்டுகளில் இருந்து 300 டிக்கெட்டுகள் தானதாரர்களுக்காக வழங்கப்படும் என TTD அறிவித்துள்ளது.

தானதாரர் கோட்டாவில் டிக்கெட்டுகள் மீதமிருந்தால், அவை மீண்டும் பொதுக் கேரண்ட் புக்கிங் கோட்டாவில் சேர்க்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

திருப்பதி விமான நிலையத்தில் தினமும் 200 டிக்கெட்டுகள் கேரண்ட் புக்கிங் முறையில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை ஜூன் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும், 2027 மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA