தாயாரின் இறுதி நிகழ்வில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அளித்தமைக்கு காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் அஜித் குமார்
தமிழ்நாடு, 31 மே (ஹி.ச.) நடிகர் அஜித் குமார் தனது தாயார் மோகினி மணி மறைவையொட்டி சென்னை திரும்பிய நிலையில், அவரது இல்லம் மற்றும் இறுதி அஞ்சலி நிகழ்வுகளின் போது காவல்துறையினர் மேற்கொண்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நன்றி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்
அஜித்குமார்


தமிழ்நாடு, 31 மே (ஹி.ச.)

நடிகர் அஜித் குமார் தனது தாயார் மோகினி மணி மறைவையொட்டி சென்னை திரும்பிய நிலையில், அவரது இல்லம் மற்றும் இறுதி அஞ்சலி நிகழ்வுகளின் போது காவல்துறையினர் மேற்கொண்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நன்றி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வயது முதிர்வு காரணமான உடல்நலக் குறைவு காரணமாக மோகினி மணி காலமானதைத் தொடர்ந்து, அஜித் குமார் துபாயிலிருந்து அவசரமாக சென்னை வந்தார்.

அவரை பார்க்க ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் திரண்டதால், காவல்துறையினர் அவரது இல்லம் மற்றும் இறுதி சடங்கு நடைபெற்ற பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற்ற இறுதி சடங்கில் திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், குடும்பத்தினருக்கு இடையூறு ஏற்படாத வகையில் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையினர் தீவிரமாக பணியாற்றினர்.

இந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளில் ஈடுபட்ட காவல்துறையினரின் சேவையை அஜித் குமார் பாராட்டி நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அவரது இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam