மேட்டூர் அணை நீர்மட்டம் சீராக உயர்வு - நீர் இருப்பு 41 டிஎம்சியை தாண்டியது
சேலம், 31 மே (ஹி.ச ) சேலம் மாவட்டத்தில் மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அணையின் நீர்மட்டம் 79.10 அடியில் இருந்து 79.16 அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் ம
மேட்டூர் அணை நீர்மட்டம் சீராக உயர்வு - நீர் இருப்பு 41 டிஎம்சியை தாண்டியது


சேலம், 31 மே (ஹி.ச )

சேலம் மாவட்டத்தில் மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் அணையின் நீர்மட்டம் 79.10 அடியில் இருந்து 79.16 அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் மொத்த நீர் இருப்பு 41.12 டி.எம்.சி.யாக பதிவாகியுள்ளது.

அதேசமயம், அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து சற்று குறைந்துள்ளது. முன்னதாக வினாடிக்கு 1,952 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது வினாடிக்கு 1,951 கன அடியாக குறைந்துள்ளது.

நீர்வரத்தில் சிறு சரிவு ஏற்பட்டிருந்தாலும், வெளியேற்றத்தை விட வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

தற்போது குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு இன்னும் தொடங்கப்படாத நிலையில், குடிநீர் தேவைக்கு மட்டும் நீர் திறக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 120 அடியாகும். தற்போதைய நீர்வரத்து தொடர்ந்தால், அடுத்த சில நாட்களில் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக அணைகளின் நீர்வரத்து மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அமையும் என அதிகாரிகள் கூறினர்.

Hindusthan Samachar / vidya.b