லோக்மாதா அகில்யாபாய் ஹோல்கரின் பிறந்தநாளில் பிரதமர் மோடி மரியாதை
புதுடெல்லி, 31 மே (ஹி.ச.) லோக்மாதா அகில்யாபாய் ஹோல்கர், மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகளுக்காகவும், குறிப்பாக பெண்களைப் பாதிக்கும் பொருளாதார மற்றும் சமூக-கலாச்சார பிரச்சினைகளில் ஆழ்ந்த அர்ப்பணிப்புக்காகவும் நினைவுகூரப்படுகிறார். மகேஸ்வரி புடவைக
லோக்மாதா அகில்யாபாய் ஹோல்கரின் பிறந்தநாளில் பிரதமர் மோடி மரியாதை


புதுடெல்லி, 31 மே (ஹி.ச.)

லோக்மாதா அகில்யாபாய் ஹோல்கர், மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகளுக்காகவும், குறிப்பாக பெண்களைப் பாதிக்கும் பொருளாதார மற்றும் சமூக-கலாச்சார பிரச்சினைகளில் ஆழ்ந்த அர்ப்பணிப்புக்காகவும் நினைவுகூரப்படுகிறார்.

மகேஸ்வரி புடவைகளை உற்பத்தி செய்த பெண் நெசவாளர்களுக்கு ஆதரவளித்து ஊக்குவித்ததோடு, பெண் கல்வி மற்றும் சமூக, மத வாழ்வில் அவர்களின் பங்களிப்பையும் ஊக்குவித்தார்.

நீர்நிலைகள், சாலைகள் மற்றும் தர்மசாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாடு முதல் இந்தியா முழுவதும் கோயில்களை மீட்டெடுப்பது மற்றும் புதுப்பிப்பது வரை அவரது பங்களிப்புகள் உள்ளன.

அவர் நிர்மாணித்த கட்டமைப்புகள் நாட்டின் கலாச்சார மற்றும் ஆன்மீகப் பாரம்பரியத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி, காலத்தைக் கடந்து நிலைத்து நிற்கின்றன.

லோக்மாதா அகில்யாபாய் ஹோல்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில் இன்று கூறியிருப்பதாவது,

லோக்மாதா அஹில்யாபாய் ஹோல்கர் ஜியின் பிறந்தநாள் நல்வாய்ப்பில், அவருக்கு எண்ணற்ற வணக்கங்கள்!

அவரது அறிவுத்திறன், கருணை மற்றும் பொதுநலனுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக, தேசம் முழுவதும் அவரை மரியாதையுடனும் கௌரவத்துடனும் நினைவுகூர்கிறது. அவரது வாழ்க்கை, நல்லாட்சி, தேசபக்தி மற்றும் கலாச்சாரப் பெருமைக்கு ஒரு முன்மாதிரியான எடுத்துக்காட்டாகும்.

நாட்டை அவர் எப்போதும் தைரியத்துடனும் கடமையுணர்வுடனும் வழிநடத்தினார். நாடு முழுவதும் உள்ள புனிதக் கோயில்கள் மற்றும் புனித யாத்திரைத் தலங்களைப் புனரமைத்தது முதல் அனைவருக்கும் நீதி மற்றும் நலனை உறுதி செய்தது வரை, அவர் ஈடு இணையற்ற பங்களிப்புகளைச் செய்தார்.

அவர் இந்தியாவின் கலாச்சார உணர்வை மேலும் வலுப்படுத்தினார்.

சமூகம், கலாச்சாரம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவரது அர்ப்பணிப்பு, நாட்டின் ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b