Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி, 04 மே (ஹி.ச.)
பிரபல இயற்கை மருத்துவ நிபுணரும், ஆந்திரப் பிரதேச யோகா மற்றும் நேச்சுரோபதி துறையின் கவுரவ ஆலோசகருமான மந்தேனா சத்யநாராயண ராஜு, அமைச்சர் நாரா லோகேஷை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
உண்டவல்லியில் உள்ள அமைச்சர் லோகேஷின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
அண்மையில் ஆந்திரப் பிரதேச அரசு, மந்தேனா சத்யநாராயண ராஜுவை யோகா மற்றும் நேச்சுரோபதி துறையின் கவுரவ ஆலோசகராக நியமித்தது.
மேலும் அவருக்கு அமைச்சரவை அந்தஸ்தும் வழங்கி அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமைச்சர் லோகேஷை சந்தித்து பேசினார்.
அப்போது இயற்கை மருத்துவத் துறையில் மந்தேனா சத்யநாராயண ராஜு பல ஆண்டுகளாக செய்து வரும் சேவைகளை அமைச்சர் லோகேஷ் பாராட்டினார்.
பொதுமக்களின் உடல்நல பாதுகாப்பிற்காக அவர் ஆற்றி வரும் பணிகள் பாராட்டத்தக்கவை என்றும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA