புதுச்சேரியில் தற்போதைய நிலவரப்படி என்டிஏ கூட்டணி முன்னிலை
புதுச்சேரி, 04 மே (ஹி.ச) யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்றது. இரண்டு முக்கிய கூட்டணிகள் இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்துகின்றன: ஒன்று தற்போது ஆட்சியில் இருக்கும் அகில இந்த
Puducherry, the NDA alliance is leading.


புதுச்சேரி, 04 மே (ஹி.ச)

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்றது.

இரண்டு முக்கிய கூட்டணிகள் இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்துகின்றன: ஒன்று தற்போது ஆட்சியில் இருக்கும் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியுடன் (பாஜக) இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி.

மற்றொன்று காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, இதில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) அங்கம் வகிக்கிறது. தவெக கூட்டணி 30 இடங்களில் களம் கண்டது.

30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மொத்தம் 201 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 166 மேஜைகளில் ஈ. வி. எம் வாக்குகளும், 35 மேஜைகளில் அஞ்சல் வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

30 தொகுதிகள் வாக்கு எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி ஆளும் என்டிஏ கூட்டணி, 22 தொகுதிகளிலும், இண்டியா கூட்டணி, 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b