தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி முடிவு
புதுச்சேரி, 06 மே (ஹி.ச.) புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. தேர்தலில் ஆளும் கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 12 இடங்கள்,பாஜக: 4 இடங்கள், அதி
Rangasamy decides to resign as MLA


புதுச்சேரி, 06 மே (ஹி.ச.)

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.

தேர்தலில் ஆளும் கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 12 இடங்கள்,பாஜக: 4 இடங்கள், அதிமுக 1 இடம், லட்சிய ஜனநாயகக் கட்சி (LJK: 1 இடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளன.

என்.ஆர். காங்கிரஸ் தலைவரும் புதுச்சேரி முதல் அமைச்சருமான ரங்கசாமி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்ட என். ரங்கசாமி 5,456 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

இந்த 2 தொகுதிகளில் ஒரு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கு இடைத்தேர்தல் நடக்கவேண்டும். அதற்கு தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்ய உள்ளார்.

முதல் அமைச்சராக பதவியேற்ற பிறகு ராஜினாமா கடிதம் அளிப்பார். இதையடுத்து அந்த தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கப்படும். 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடக்கும்.

தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் போட்டியிடுவார்.

முதல் அமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியபோது வாக்காளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், தட்டாஞ்சாவடி தொகுதியில் அசோக் ஆனந்த் போட்டியிடுவார் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b