Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா , 01 ஜூன் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி, அவர் மீது சமூக ஊடகங்களில் பரவி வரும் நில அபகரிப்பு குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளது.
இவை முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்துடன் பரப்பப்படும் தவறான தகவல்கள் என கட்சி விளக்கம் அளித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஜனசேனா கட்சியின் பொதுச் செயலாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான ராம் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில்,
பவன் கல்யாணின் வாழ்க்கை நேர்மை, தியாகம் மற்றும் மக்கள் சேவைக்கு எடுத்துக்காட்டு எனவும், அவர் வாழ்க்கை “திறந்த புத்தகம்” போன்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சைக்குள்ளான நிலம் தெலங்கானா மாநிலம் ஷங்கர்பள்ளி மண்டலத்தின் ஜன்வாடா பகுதியில் அமைந்துள்ளது. அந்த நிலத்தை பவன் கல்யாண் 2014 ஆம் ஆண்டிலேயே சட்டப்படி விவசாய நிலமாக வாங்கியதாக ஜனசேனா தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், அனைத்து பதிவு ஆவணங்கள், மியூட்டேஷன் செயல்முறைகள் மற்றும் வரி செலுத்தும் நடைமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதாகவும் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
அந்த நிலத்தில் எந்தவிதமான சட்டவிரோத கட்டுமானமும் இல்லை என்றும், விவசாயப் பணிகள் மட்டுமே நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், இந்த குற்றச்சாட்டு முற்றிலும் அரசியல் தூண்டுதலால் உருவாக்கப்பட்ட தவறான பிரச்சாரம் என ஜனசேனா கட்சி தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA