எனது கால்கள் ஓய்கின்ற கால்கள் அல்ல, ஓடுகின்ற கால்கள் - முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பேச்சு
புதுக்கோட்டை, 01 ஜூன் (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் கடந்த இரண்டு தினங்களாக விராலிமலை சட்டமன்
சி.விஜயபாஸ்கர்


புதுக்கோட்டை, 01 ஜூன் (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் கடந்த இரண்டு தினங்களாக விராலிமலை சட்டமன்றத் தொகுதி முழுவதும் நன்றி தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் விராலிமலை கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பிலிப்பட்டி, பாக்குடி, ஆலங்குடி, வெண்மணி நீர்பழனி, உள்ளிட்ட பகுதிகளில் இன்றைய தினம் நன்றி தெரிவித்து வருகிறார்.

அப்போது பேசிய அவர்,

எனது கால்கள் ஓய்வெடுக்கின்ற கால்கள் அல்ல எப்போதும் உங்களுக்காக ஓடுகின்ற கால்கள் என்றும் நான் எப்பொழுதும் உங்களுக்கும் இந்த மண்ணுக்கும் விராலிமலை தொகுதி மக்களுக்கும் நன்றியுடனும் விசுவாசமாக பணியாற்றுவேன் என்று பேசினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam