Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜூன் (ஹி.ச.)
சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ள சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மரகதாம்பாள் உடனுறை இரவீஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழாவரும் 13-ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்குகிறது.
இதை முன்னிட்டு ஜூன் 11-ம் தேதி கிராம தேவதை உத்தரவு - பாலாத்தம்மன் கோயில் பூஜை, 12-ம் தேதி கணபதி ஹோமம் நடைபெறவுள்ளது.
ஜூன் 13-ம் தேதி காலை 8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது.
இதையடுத்து ரிஷப வாகன உற்சவம், சூரிய பிரபை, சந்திர பிரபை உற்சவம், அதிகார நந்தி சேவை, ஆகியவை நடைபெற உள்ளன.
ஜூன் 19-ம் தேதி காலை 8.30 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது.
ஜூன் 22-ம் தேதி காலை 5.30 மணிக்கு நடராஜ தரிசனம், காலை 9 மணிக்கு தீர்த்தவாரி, இரவு 8 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
23-ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவுபெறுகிறது. 24-ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.
தமிழக முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளதால், பிரம்மோற்சவ விழா மற்றும் தேரோட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்த அனைத்துத் துறை அதிகாரிகள் கோவில் நிர்வாகத்தினருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b