Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 11 ஜூன் (ஹி.ச.)
புடலங்காய் (Snake Gourd) சாகுபடி தமிழ்நாட்டில் நல்ல மகசூலையும், தொடர்ச்சியான லாபத்தையும் தரக்கூடிய ஒரு சிறந்த காய்கறிப் பயிராகும்.
மண் வகை:
வடிகால் வசதியுள்ள செம்மண் மற்றும் வண்டல் மண் புடலங்காய் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது.
பருவகாலம்:
ஜூன்-ஜூலை (ஆடி பட்டம்) மற்றும் ஜனவரி-பிப்ரவரி (தை பட்டம்) ஆகிய மாதங்கள் சாகுபடி செய்ய உகந்தவை.
நிலம் தயாரித்தல் மற்றும் விதை தேர்வுநிலம் தயார் செய்தல்:
நிலத்தை 3 அல்லது 4 முறை நன்றாக உழுது பண்படுத்த வேண்டும்.
கடைசி உழவின்போது ஏக்கருக்கு 8 முதல் 10 டன் (ஹெக்டேருக்கு 20 டன்) மக்கிய தொழு உரம் இட வேண்டும்.
விதை அளவு:
ஒரு ஏக்கர் நிலத்திற்கு சுமார் 1.5 முதல் 2 கிலோ விதைகள் தேவைப்படும்.
விதை நேர்த்தி:
விதைப்பதற்கு முன் விதைகளை 24 மணி நேரம் நாட்டு மாட்டு சாணம் அல்லது அசோஸ்பைரில்லம் கலந்த நீரில் ஊற வைப்பது முளைப்புத்திறனை அதிகரிக்கும்.
விதைப்பு முறைநிலத்தில் 2 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீ அகலமுள்ள வாய்க்கால்கள் அமைக்க வேண்டும்.
வாய்க்காலின் இருபுறமும் 1.5 மீட்டர் இடைவெளியில் குழிகள் எடுத்து, ஒவ்வொரு குழிக்கும் 2 அல்லது 3 விதைகளை விதைக்க வேண்டும்.விதைத்த 4 முதல் 6 நாட்களில் விதைகள் முளைத்து வரும்.
பந்தல் அமைத்தல்:
புடலங்காய் கொடி வகையைச் சேர்ந்தது என்பதால், காய்கள் தரமானதாகவும், நேராகவும், அதிக மகசூல் தரவும் கண்டிப்பாக பந்தல் அமைக்க வேண்டும்.
மூங்கில் குச்சிகள், கம்பிகள் மற்றும் கயிறுகளைப் பயன்படுத்தி 6 முதல் 7 அடி உயரத்தில் பந்தல் அமைக்கலாம்.கொடிகள் வளர ஆரம்பித்தவுடன் பந்தலில் ஏற்றிவிட வேண்டும்.
அடி உரம்:
நடவின்போதே அடியுரமாக தேவையான தொழு உரம் இட வேண்டும்.
மேல் உரம்:
கொடிகள் படர ஆரம்பித்தவுடன், ஏக்கருக்கு யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் ஆகியவற்றை குறிப்பிட்ட அளவில் இடுவது செடிகளின் வளர்ச்சிக்கு உதவும்.
இயற்கை முறையில் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் போன்றவற்றை தெளிக்கலாம்.
தண்ணீர் பாய்ச்சுவது:
விதைத்தவுடன் ஒரு முறை, பின்னர் முளைக்கும் வரை தினமும் சிறிதளவு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கொடிகள் வளரும் பருவத்தில் வாரம் ஒரு முறை அல்லது தேவைக்கேற்ப நீர் பாய்ச்சுவது அவசியம்.
களை எடுத்தல்:
முதல் 30 நாட்களுக்கு நிலத்தை களையின்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
அறுவடை:
புடலங்காய் விதைத்த 65 முதல் 75 நாட்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும்.
காய்கள் நன்கு நீளமாகவும், முற்றாத நிலையிலும் (பிஞ்சுப் பருவத்தில்) காம்புடன் சேர்த்து அறுவடை செய்ய வேண்டும்.
தொடர்ந்து வாரம் இருமுறை அறுவடை செய்யலாம்.
இதன் மூலம் சுமார் 3 மாதங்கள் வரை மகசூல் கிடைக்கும்.
Hindusthan Samachar / Durai.J