அகங்காரம் மற்றும் அழிவை ஏற்படுத்தும் அரசியலுக்கு எதிராக ஜனநாயகம் பெற்ற வெற்றியே 2024 தேர்தல் - பவன் கல்யாண்
திருப்பதி, 12 ஜூன் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்தில் கூட்டணி அரசு அமைந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது, இந்த பொதுக்கூட்டத்தில் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்து கொண்டார். அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர
A


திருப்பதி, 12 ஜூன் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்தில் கூட்டணி அரசு அமைந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது, இந்த பொதுக்கூட்டத்தில் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்து கொண்டார்.

அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,

ஜனநாயகத்தில் இறுதி தீர்ப்பை வழங்குபவர்கள் மக்களே என்றும், அவர்களின் தீர்ப்பை விட பெரிய சக்தி எதுவும் இல்லை.

2024-ம் ஆண்டு தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு வெறும் ஆட்சி மாற்றத்திற்கானது மட்டுமல்ல.

மாநிலத்தின் எதிர்காலத்திற்கு புதிய திசையை காட்டிய தீர்ப்பாகும்.

மாநில மறுசீரமைப்பிற்காக மக்கள் கூட்டணியின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற அரசு உறுதியாக செயல்பட்டு வருகிறது.

2 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் எங்களுக்கு வெறும் அதிகாரத்தை மட்டும் வழங்கவில்லை. மிகப்பெரிய பொறுப்பையும் ஒப்படைத்துள்ளனர்.

அகங்காரம் மற்றும் அழிவை ஏற்படுத்தும் அரசியலுக்கு எதிராக ஜனநாயகம் பெற்ற வெற்றியே 2024 தேர்தல் முடிவாகும்.

மாநில வளர்ச்சிக்கும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும் கூட்டணி உருவாக்கப்பட்டது.

அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதற்காக அல்ல, பொறுப்பை பகிர்ந்து கொள்வதற்காகவே இந்த கூட்டணி அமைந்தது.

தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு முழுமையாக உறுதி பூண்டுள்ளது.

கிராமப்புற வளர்ச்சிக்கான பஞ்சாயத்து ராஜ் அமைப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) அரசின் ஒருங்கிணைந்த முயற்சியால் விசாகப்பட்டினம் எஃகு ஆலை தனியார்மயமாக்கப்படுவதை தடுக்க முடிந்தது.

மேலும், நாட்டின் நீண்டகால பிரதமராக தொடர்ந்து பதவி வகித்து வரும் நரேந்திர மோடிக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA