Enter your Email Address to subscribe to our newsletters

நாக்பூர், 12 ஜூன் (ஹி.ச.)
நாட்டின் அரசியலமைப்பு நிறுவனங்கள் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் கீழ் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக எச்சரித்த காங்கிரஸ் தலைவர் நானா படோலே , இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் காங்கிரஸுடன் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய படோலே கூறுகையில் ,
மத்தியில் உள்ள பாஜக அரசு அரசியலமைப்பு நிறுவனங்களைச் சிதைக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக இப்போது பலர் உணர்கின்றனர்.
நாட்டைக் காப்பாற்ற வேண்டும், காங்கிரஸுடன் கைகோர்த்தால் மட்டுமே அது சாத்தியம் ஆகும்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்தியில் ஒற்றுமையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகின்றது.
இது இப்போது வெவ்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்குத் தெளிவாகி உள்ளது. மம்தா பானர்ஜி, சரத் பவார் என அனைவரும் நாட்டைக் காப்பாற்ற காங்கிரஸுடன் இணைய வேண்டும் என்று உணர்கின்றனர்.
அந்த செயல்முறை இப்போது தொடங்கி உள்ளது.
என்று படோலே மேலும் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b