Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத், 12 ஜூன் (ஹி.ச.)
தமிழக காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா பொறுப்பாளர் மீனாட்சி நடராஜனின் ராஜ்யசபா வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு தெலுங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டி (டிபிசிசி) செயல்தலைவர் ஜக்காரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :
மீனாட்சி நடராஜன் மீது எந்தவித குற்றவியல் வழக்குகளும், நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகளும் இல்லை என்றும், அவரின் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை முழுவதும் தூய்மையானது என்றும் அவர் தெரிவித்தார்.
அத்தகைய நேர்மையான தலைவரின் வேட்புமனுவை நிராகரித்தது அநியாயமானதும், கோழைத்தனமான நடவடிக்கையும் என அவர் விமர்சித்தார்.
இது பாஜகவின் திட்டமிட்ட அரசியல் சதி என்றும், தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி மத்தியப் பிரதேச அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் ஜக்காரெட்டி குற்றம்சாட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து அரசியல் அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரே ராஜ்யசபா இடத்துக்காக இவ்வளவு கீழ்த்தரமான அரசியலை பாஜக மேற்கொள்வது ஏன் எனவும் ஜக்காரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA