Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 13 ஜூன் (ஹி.ச.)
இந்தியா கூட்டணி தொடர்பான கூட்டத்தில், கேரளாவில் அரசியல் போட்டி இருப்பதால் தன்னை பினராயி விஜயனை கட்டிப்பிடிக்க மாட்டேன் என்று ராகுல் காந்தி கூறியதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த பினராயி விஜயன்,
யார் யாரை கட்டிப்பிடிக்கிறார்கள் என்பது எனக்கு முக்கியமல்ல.
பிரதமர் நரேந்திர மோடியை ராகுல் காந்தி கட்டிப்பிடித்த புகைப்படம் அனைவரும் பார்த்திருப்பதாகவும், அதில் தனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.
ஆனால், அந்த வகை கருத்துகள் மற்றும் அணுகுமுறை ஒரு குறிப்பிட்ட அரசியல் செய்தியை வெளிப்படுத்துவதாகவும், அது இந்தியா கூட்டணிக்குள் உள்ள நிலைப்பாடுகளை பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா கூட்டணிக்குள் காங்கிரஸ் அல்லாத கட்சித் தலைவர்கள் அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் சில சந்தர்ப்பங்களில் காங்கிரஸ் நிலைப்பாடுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளதாகவும் பினராயி விஜயன் கூறினார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையும், குறிப்பாக ராகுல் காந்தியின் அணுகுமுறையும் இந்தியா கூட்டணியை வலுப்படுத்தவில்லை என்றும், சில நேரங்களில் அது பா.ஜ.க.வுக்கு உதவியாக அமைகிறது என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
இந்தியா கூட்டணிக்குள் காங்கிரஸ் அல்லாத கட்சித் தலைவர்கள் அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் சில சந்தர்ப்பங்களில் காங்கிரஸ் நிலைப்பாடுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளதாகவும் பினராயி விஜயன் கூறினார்.
தற்போது தி.மு.க. எந்த நிலைப்பாட்டில் உள்ளது என்பதையும் மக்கள் பார்க்க முடிகிறது.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையும், குறிப்பாக ராகுல் காந்தியின் அணுகுமுறையும் இந்தியா கூட்டணியை வலுப்படுத்தவில்லை என்றும், சில நேரங்களில் அது பா.ஜ.க.வுக்கு உதவியாக அமைகிறது என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA