Enter your Email Address to subscribe to our newsletters

தெலங்கானா, 13 ஜூன் (ஹி.ச.)
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது,
தெலங்கானாவில் எந்த அரசியல் கட்சிக்கும் அல்லது தலைவருக்கும் அரசியல் செயல்பாடுகளில் தடையில்லை என்றும், அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
ஜனசேனா தலைவர் மற்றும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் நடத்த திட்டமிட்டிருந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த அவர்,
அந்த முடிவு முழுக்க முழுக்க சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாகவும், இதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும் கூறினார்.
தெலங்கானாவில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்றும், விதிமுறைகளுக்குட்பட்டு அனைத்து கட்சிகளும் தங்கள் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தேசிய அரசியல் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்த ரேவந்த் ரெட்டி, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவி மீனாட்சி நடராஜன் ராஜ்யசபா வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக சந்தேகம் எழுப்பினார்.
சட்டரீதியாக பெரிய தடைகள் இல்லாத நிலையிலும் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது கேள்விக்குறியாக உள்ளது என்று அவர் கூறினார்.
தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளின் வாய்ப்புகளை பாதிக்கும் வகையில் செயல்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மக்கள் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் தேர்தல் அமைப்புகள் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA