Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி, 14 ஜூன் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச தலைநகர் அமராவதி பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் எந்தவித இடையூறும் இன்றி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என மாநில அமைச்சர் லோகேஷ்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
அமராவதி பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும், சிறிய மழை பெய்தாலே பணிகள் பாதிக்கப்படுவதாகவும் சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். ஆனால் அவை முற்றிலும் உண்மையற்றவை. தலைநகர் திட்டப் பணிகள் முழு வேகத்தில் முன்னேறி வருகின்றன.
சட்டமன்றம், உயர்நீதிமன்றம், முக்கிய சாலைகள், நீர்தேக்கங்கள், ஐகானிக் கோபுரங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும் எம்எல்ஏ, எம்எல்சி குடியிருப்புகள் மற்றும் அமைச்சர்களுக்கான பங்களாக்கள் கட்டுமான பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.
அமராவதி வளர்ச்சி பணிகளின் முன்னேற்றத்தை காட்டும் வீடியோவை தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அமைச்சர் லோகேஷ் , தலைநகர் குறித்து பரவி வரும் தவறான பிரச்சாரங்களை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA