உணவு என்பது எப்போதும் குடும்பம் மற்றும் மகிழ்ச்சியுடன் இணைந்தது - கீர்த்தி சுரேஷ்!!
கோவை, 14 ஜூன் (ஹி.ச.) கோயம்புத்தூரில் ஃபியோனா சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் நிறுவனம் சார்பில், தமிழ்நாடு முழுவதிலுமிருந்து வந்திருந்த அதன் வணிகப் பங்காளர்களுக்கான சிறப்புக் கூட்டம் மற்றும் ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நட
ம்


கோவை, 14 ஜூன் (ஹி.ச.)

கோயம்புத்தூரில் ஃபியோனா சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் நிறுவனம் சார்பில், தமிழ்நாடு முழுவதிலுமிருந்து வந்திருந்த அதன் வணிகப் பங்காளர்களுக்கான சிறப்புக் கூட்டம் மற்றும் ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஃபியோனா நிறுவனத்தின் பிராண்ட் தூதரும், தேசிய விருது பெற்ற பிரபல நடிகையுமான கீர்த்தி சுரேஷ் மற்றும் பங்க் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்தீப் சிங் ஆகியோர் நேரில் கலந்து கொண்டனர்.

இன்றைய காலகட்டத்தில் நுகர்வோர் பலரும் உணவுப் பொருட்களின் ஊட்டச்சத்துக்கள் குறித்து அதிக கவனம் செலுத்தினாலும், அன்றாட சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய் தேர்வில் போதிய கவனம் செலுத்துவதில்லை. இதனைத் தொடர்ந்து, குடும்பங்களின் ஆரோக்கியத்தில் சமையல் எண்ணெயின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், சிறந்ததைத் தேர்ந்தெடுங்கள், சிறந்ததை உண்ணுங்கள் என்ற தத்துவத்தின் கீழ் இந்த விழிப்புணர்வு முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ்,

என்னைப்பொறுத்தவரை உணவு என்பது எப்போதும் குடும்பம் மற்றும் மகிழ்ச்சியுடன் இணைந்தது.

மக்கள் தங்களுக்குப் பிடித்த சுவைகளையும் பாரம்பரிய உணவுகளையும் கைவிடச் சொல்லாமல், அந்த உணவுகள் எவ்வாறு ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்படுகிறது என்பதில் அதிக கவனம் செலுத்த ஃபியோனா நிறுவனம் ஊக்குவிக்கிறது.

அன்றாட சமையலில் நாம் செய்யும் சிறிய நல்ல மாற்றங்களே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்தீப் சிங்,

சமையலறையில் நாம் ஒவ்வொரு நாளும் எடுக்கும் முடிவுகள், காலப்போக்கில் நமது ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நுகர்வோர் விழிப்புணர்வுடன் நல்ல முடிவுகளை எடுக்கவே நாங்கள் விரும்புகிறோம் என்றார்.

மேலும், ஃபியோனா சூரியகாந்தி எண்ணெயில் உள்ள 'விட்டோ ப்ரொடெக்ட் ஃபார்முலா' (Vito Protect Formula), சாதாரண எண்ணெய்களை விட உணவுக்கு வைட்டமின்கள் கடத்தப்படுவதை 50% வரை அதிகரிக்க உதவுகிறது என்பதும் இந்த நிகழ்வில் குறிப்பிடத்தக்க அம்சமாக எடுத்துரைக்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள நுகர்வோருடன் ஆரோக்கியமான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த சிறப்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / Durai.J